fbpx

வேலைக்கு செல்லாமல் பைக் ரெய்டு..!! ராங் ரூட்டில் சென்ற காதல் ஜோடி..!! லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலி..!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (26). ராதாபுரம் அருகே உள்ள பழவூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா (19). இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியர்களாக வேலைபார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் இருவரும் வேலைக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நம்பிநகர் பகுதிக்கு சென்றனர்.

பின்னர், சிறிது நேரத்தில் வள்ளியூர் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள 4 வழிச்சாலை சர்வீஸ் சாலையில் செல்வதற்கு பதிலாக தவறுதலாக மெயின் ரோட்டில் எதிர்புறத்தில் சென்றனர். அப்போது, அவ்வழியாக கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சாலமன், மதுமிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லாரி மோதி காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஏற்கனவே 2 மனைவிகள்..!! நடுவே வந்த அமலா..!! அதியமான் செல்போனில் நர்ஸ்களின் ஆபாச படங்கள்..!! லட்சக்கணக்கில் கைமாறிய பணம்..!!

English Summary

A lorry carrying fish waste collided with a two-wheeler in the blink of an eye.

Chella

Next Post

அங்கன்வாடி மதிய உணவில் இறந்து கிடந்த பாம்பு!. பெற்றோர்கள் அதிர்ச்சி!

Fri Jul 5 , 2024
Snake found dead in Anganwadi lunch! Parents shocked!

You May Like