fbpx

பறவைக் காய்ச்சல் எதிரொலி.. முட்டை கொள்முதல் விலை சரிவு..!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி முட்டை கொள்முதல் விலையை 30 காசு குறைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் முட்டை விலை குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் முட்டைத் தளமாக விளங்கும் நாமக்கலில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு 2024 டிசம்பரில் முட்டை விலை ரூ.5.90 ஆக உயர்ந்த நிலையில், சில்லறை சந்தையில் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக, பொதுமக்களில் முட்டை நுகர்வு குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 30 காசு குறைக்க தீர்மானிக்கப்பட்டது. இதனால், ஒரு முட்டையின் விலை ரூ.4.90-ல் இருந்து ரூ.4.60 ஆக குறைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு முட்டை ரூ.5 முதல் ரூ.5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (National Egg Coordination Committee, NECC) என்பது இந்தியாவில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பு ஆகும். இது முட்டை விலைகளை நிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. நீண்டகாலமாக, NECC முட்டை விலைகளை தினசரி அறிவித்து, சந்தை நிலவரத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. NECC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.e2necc.com மூலம், முட்டை விலைகள், சந்தை தகவல்கள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்.

Read more:மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்.. அம்பானி அதானி எந்த இடத்தில்..? – வெளியான ரிப்போர்ட்

English Summary

Bird flu reverberates.. Egg purchase price declines..!

Next Post

சென்னையில் நில அதிர்வு..? பயிற்சி மையத்தில் இருந்து பதறியடித்து ஓடிய மாணவர்கள்..!! அண்ணா சாலையில் பரபரப்பு..!!

Fri Feb 28 , 2025
There was a huge commotion after an earthquake was felt at a private government competitive exam coaching center on Anna Salai, Chennai.

You May Like