fbpx

உஷார்…! நீங்க குடிக்கும் தண்ணீர் பாட்டில் இந்த முத்திரை இல்லையா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!

இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைதண்டனையோ அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.ஐஎஸ்ஐ முத்திரைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால் இந்திய தர நிர்ணய அமைவன தென் மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு தெரு, தரமணி, சென்னை – 13 என்ற முகவரியிலோ BIS Care App என்ற செயலிலோ என்ற cnbo2@bis.gov.in மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். .

மேலும் விவரங்களுக்கு 044-2254 1984 என்ற சென்னை அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது www.bis.gov.in என்ற இணையதளம் முகவரியிலோ அறிந்து கொள்ளலாம் என இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை -2 தலைவர் பவானி தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பதுக்கி வைத்திருந்த பட்டாசு..!! வெடித்து சிதறியதில் 4 பேர் உடல்சிதறி பலி..!! நாமக்கல்லில் பரபரப்பு..!!

Sat Dec 31 , 2022
நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வரும் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். இந்த தீவிபத்தில் மூதாட்டி பெரியக்காள் (73), தில்லை […]
பதுக்கி வைத்திருந்த பட்டாசு..!! வெடித்து சிதறியதில் 4 பேர் உடல்சிதறி பலி..!! நாமக்கல்லில் பரபரப்பு..!!

You May Like