fbpx

’அண்ணாமலை வெற்றி பெற கைவிரலை துண்டித்த பாஜக நிர்வாகி’..!! பரபரப்பு சம்பவம்..!!

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற பாஜக நிர்வாகி ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர், அந்த மாவட்டத்தின் பாஜக துணைத்தலைவராக உள்ளார். கோவை மக்களவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர்.

அந்த வகையில், கடந்த சில தினங்களாக கோவையில் துரை ராமலிங்கம் தங்கி பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், திடீரென தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது இடது கை ஆட்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். அவர், அப்போது அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று முழக்கமிட்டவாறே துண்டித்தார்.

இதனை பார்த்த சக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விரல் இணைக்கப்பட்டது. இதே போல கர்நாடகாவைச் சேர்ந்த அருண் வார்னகேர் என்பவர் மோடி மீண்டும் முறையும் பிரதரமராக வேண்டும் என்று தனது இடது கை ஆள்காட்டி விரலை வெட்டி காளிக்கு பலி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Read More : நாளை வாக்குப்பதிவு..!! ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

Chella

Next Post

இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்த யுவன்..! விஜயின் ரசிகர்கள் தான் காரணமா? என்ன நடந்தது?

Thu Apr 18 , 2024
கோட் படத்தின் விசில் போடு பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  2 மில்லியனுக்கும் அதிகமான Followers கொண்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர். அவருடைய இசையில் ஒளிபரப்பான அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்களாக மாறியுள்ளது. தற்பொழுது அவர் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் […]

You May Like