இறையாண்மை குறித்து சோனியா காந்தியின் கருத்து குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதற்கான இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடந்த ஆறாம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய போது
கர்நாடக மாநிலத்தின் நற்பெயருக்கும்,
இறையாண்மைக்கும்,
ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை
ஏற்படுத்த நினைக்கும் யாரையும்
காங்கிரஸ் அனுமதிக்காது என கூறியிருந்தார்.
சோனியா காந்தியின் கருத்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இறையாண்மை குறித்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.