fbpx

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! ஆர்டிஎக்ஸ் போல் வெடிக்கும்..!! சென்னையில் பரபரப்பு..!!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு, மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீர் என்ற பெயரில் மதியம் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ஆர்டிஎக்ஸ் வகையில் இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சோதனை செய்து பார்த்ததில், இது புரளி என்பது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமி அப்போது முதல்வராக இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read More : அனைத்து வீடுகளுக்கும் வருகிறது இன்டர்நெட் சேவை..!! மாதம் ரூ.200 செலுத்தினால் போதும்..!! 100 Mbps வேகம்..!! அமைச்சர் பிடிஆர் சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

The bomb threat to the house of AIADMK General Secretary Edappadi Palaniswami has caused a stir.

Chella

Next Post

1971 போரில் பாகிஸ்தானுக்கு எதிரான ரகசிய நடவடிக்கைக்கு ஆணுறைகளை பயன்படுத்திய இந்தியா..! என்ன நடந்தது..?

Fri Apr 25 , 2025
இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 4 முறை போரில் ஈடுபட்டுள்ளன. அதாவது 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. இந்த போர்களின் மூலம் துணிச்சலான மற்றும் மூலோபாய ரீதியாக எதிரிகளை தோற்கடித்த ஏராளமான கதைகள் நாம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் 1971 வங்கதேச விடுதலைப் போரின் போது விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. இந்தியப் படைகளின் திறமையையும் சாதுர்யத்தையும் நிரூபிக்கும் வகையில் அது நிகழ்ந்தது. […]

You May Like