காதலியை வீட்டிற்கு வரவைத்து அவரை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கரிதி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளைஞர் தனது காதலியை இரவு வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த இளம் பெண்ணும் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த காதலன் அவரது தந்தை, தாய் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து காதலியை அரை நிர்வாணமாக்கி அவர்கள் வீட்டில் இருந்த மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
பின்னர், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த இளம் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் காதலன் அவரது தந்தை, தாய் மற்றும் சித்தி ஆகிய 4 பேரையும் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.