fbpx

#Breaking..!! ஆஃப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!!

ஆஃப்கானிஸ்தான் ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 113 கி.மீ. ஆழத்தில் காலை 6.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.25 மணிக்கு மீண்டும் ஃபைசாபாத்தில் இருந்து 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

கோப்புப் புகைப்படம்

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குளுங்கின. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Chella

Next Post

”உங்கள நம்பி தான டா வந்தேன்”..!! ”இப்படி மோசம் பண்ணிட்டீங்களே”..!! விடிய விடிய மாணவி பலாத்காரம்..!!

Thu Feb 23 , 2023
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம். அதன்படி, கடந்த 18ஆம் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்துள்ளார். வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் சென்று விடலாம் என்று மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பி […]

You May Like