ஆஃப்கானிஸ்தான் ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 113 கி.மீ. ஆழத்தில் காலை 6.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.25 மணிக்கு மீண்டும் ஃபைசாபாத்தில் இருந்து 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/af-1024x576.jpg)
மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குளுங்கின. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.