முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (பிப்ரவரி 16) நேரில் ஆஜராக வேண்டுமென நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி, நாளைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை தொடங்கும் என்றும் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.