fbpx

BREAKING | குடிபோதையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது..!!

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். தற்போது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது வேல்முருகன் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரபல பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்தனர். மேலும், மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கியபோது வேல்முருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More : கோடை காலத்தில் முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்..? கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்..!!

Chella

Next Post

"லோக்சபா தேர்தலில் 'அப்கி பார் 400 பார்' மீது பாஜக கவனம் செலுத்த இதுதான் காரணம்!" - பிரதமர் மோடி நேர்காணல்..

Mon May 13 , 2024
பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், இட ஒதுக்கீடு, அப்கி பார் 400 பார் மீது பாஜக கவனம் செலுத்த காரணம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜக ஏன் ‘அப்கி பார் 400 பார்’ மீது கவனம் செலுத்துகிறது? 2019 முதல் 2024 வரை […]

You May Like