fbpx

#Breaking : இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு…

இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.

இந்நிலையில் இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. வரும் 30-ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ள நிலையில் இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது..

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY நன்மைகள்) பணவீக்கம் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. நாட்டின் 80 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரேஷனை மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மத்திய அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இதை எல்லாம் மறக்காதீங்க.. UPI மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை..

Wed Sep 28 , 2022
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் சைபர் கிரைம் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.. 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 13,951 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது.. இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடிகளுக்கு மத்தியில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பு குறிப்புகளை வழங்கி உள்ளது.. அந்த வகையில் UPI பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக பயன்படுத்த சில UPI பாதுகாப்பு குறிப்புகளை எஸ்பிஐ வங்கி பகிர்ந்துள்ளது. இதுகுறித்து […]

You May Like