இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில் இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. வரும் 30-ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ள நிலையில் இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது..
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY நன்மைகள்) பணவீக்கம் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. நாட்டின் 80 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரேஷனை மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மத்திய அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது..