அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த மாதம் 27 ஆம் தேதி முடிவுற்றது.இந்த நிலையில் அதன் தீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வால் இன்று வெளியிடப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு, நீதிபதி பரத சக்கரவர்த்தி இந்த வழக்கில் ஒரு மாறுபட்ட தீர்ப்பை தெரிவித்துள்ளார். 2 நீதிபதிகளுமே மாறுபட்ட கருத்தையும் மாறுபட்ட தீர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
ஒரு நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதாவது நீதிபதி நிஷா பானு அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவித்து இருக்கிறார். அதே நேரம் மற்றொரு நீதிபதி அவருடைய விடுவிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அதாவது நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜியை விடுவித்த நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி இந்த மனு தள்ளுபடி செய்ய வேண்டிய மனு என்று கூறியுள்ளார்.
மேலும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட அமலாக்க துறையின் கஸ்டடியில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த மனு தள்ளுபடி செய்ய வேண்டிய மனு என்று நீதிபதி பாரத சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதோடு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மூன்றாவது நீதிபதி ஒருவரை நியமனம் செய்து மேலும் இந்த வழக்கில் விசாரணை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.