2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
— வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
— 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.
— 2023-24இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, அரசின் செலவு ரூ.40.90 லட்சம் கோடி.
— கடந்த 2023 -24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5,93,598 கோடி ஆக இருந்த பாதுகாப்புத்துறை நிதி, இந்த 2024 – 25ஆம் ஆண்டு ரூ.11,11,111 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
— மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
— வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
— இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை.