fbpx

#Breaking : பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்..

பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.. தேர்வு கண்காணிப்பாளர்களை எப்படி நியமிப்பது..? வினாத்தாள் பாதுகாப்பு போன்றவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 9-ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.. ஏற்கனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் முன் கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்..

மேலும் மே 5-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மே 17-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.. மே 19-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் 10,11,12 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் பிப்ரவரி 1 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Maha

Next Post

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பாதிப்பு குறித்து வெளியான தகவல்..

Mon Jan 30 , 2023
சீனாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கம் 40.01 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 82.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று சீனா பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அலேர் நகரிலிருந்து 105 கிமீ தொலைவிலும், ஷாயா கவுண்டி இருக்கையிலிருந்து 141 கிமீ தொலைவிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத […]

You May Like