திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள முத்தழகுப்பட்டியில் தர்மராஜ் என்பவர் லோடுமேனாக பணிபுரிந்து வருகிற மகன் ராஜ்குமாருடன்(32) வசித்து வருகிறார். சென்ற 2017 ஜூன் மாதம் ராஜ்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராஜ்குமாரை சொத்து தகராறில் முத்தழகுபட்டியை சேர்ந்த இவரின் சகோதரர்களான சுரேஷ் அந்தோணி(36), தாமஸ் செல்வம்(40), உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக வழக்கு இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் சுரேஷ் அந்தோணி தாமஸ் செல்வம், ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.