நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் அறிவிப்புகள்
➦ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம் வழங்கப்படும்.
➦ சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு தேவையான கருவிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.
➦ அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அதிகரிக்க நடவடிக்கை.
➦ நாடு முழுவதும் மேல்நிலைப்பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட்.
➦ மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
➦ அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்.
➦ அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
➦ அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்படும்.
Read More : BUDGET BREAKING | பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!