fbpx

இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது. இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இருப்பினும், முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு 2023 ஜனவரி 25 அன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இதனை பரிசீலித்தப்பின் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்துள்ள தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீட்டையும் ஒத்திவைத்துள்ளது.

Vignesh

Next Post

காதலனை அடித்து ரயிலில் தூக்கி வீசிவிட்டு காதலியை பலாத்காரம் செய்த இருவர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Tue Jan 31 , 2023
காதலனுடன் கடற்கரையில் பொழுதைபோக்கிய சிறுமியை, போலீஸ் எனக்கூறி இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடலின் கழிமுகப்பகுதியில் 17 வயது சிறுமியும் அவரது காதலனும் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி வந்த இருவர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் இந்த இடத்துக்கு தனியாக ஏன் வந்தீர்கள்..? என மிரட்டியதோடு, உங்களை விசாரிக்க […]

You May Like