fbpx

வீடுகளில் சோலார் அமைப்பதால் இவ்வளவு பணத்தை சேமிக்க முடியுமா..? குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்..!!

மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தனது பட்ஜெட் உரையின் போது பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, மின்சார பயன்பாட்டில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வீடுகளின் மேற்கூரையில் சோலார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை சுட்டிக்காட்டினார்.

மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் இந்த திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டார். வீட்டின் சோலார் மின்சார பயன்பாட்டின் மூலம் சேமிக்கும் பணம் மற்றும் எஞ்சிய மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என இந்த திட்டத்தில் பயனடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை செலவு மீதமாகும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Chella

Next Post

#தலைவர்விஜய்!... ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!… அறிவிப்புக்கு தயாராக இருக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!

Fri Feb 2 , 2024
விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், #தலைவர்விஜய் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக […]

You May Like