fbpx

கர்ப்பிணிகள் ஹேர் கலர் பயன்படுத்தலாமா கூடாதா..?

கர்ப்பகாலம்என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கடினமான காலம் என்றே கூறலாம். இந்த நேரத்தில் எல்லாவற்றிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் போது, உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக நமது உடலிலும், நமது மன நிலையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் உணவு முதல் பல விஷயங்களை கவனித்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மக்களை அழகாகவும் இளைமையாகவும் வைக்க ஹேர் கலர் மிகவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்க, பெண்கள் சில விஷயங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹேர் கலரில் பல இரசாயனங்கள் உள்ளன, எனவே இந்த ஹேர் கலரை பெண்கள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலருக்கு இருந்து வருகிறது.

கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதன் பாதுகாப்பு பற்றி அதிகம் அறியப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் முடி சாயத்தில் உள்ள ரசாயனங்களில் ஒரு சிறிய பகுதி (குறைந்தபட்சம்) உங்கள் உச்சந்தலை மூலமாக உங்கள் உடலில் உறிஞ்சப்படுகிறது. கர்ப்ப காலத்தில் எந்த பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாது என்பதால் ஹேர் கலரிங் செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்து அதிக ஆராய்ச்சி இல்லை.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் மென்மையானவை.ஏனென்றால் முதல் மூன்று மாதங்களில் மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற முக்கியமான உறுப்புகள் உருவாகின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூச விரும்பினால், முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கவும். மேலும் கர்ப்ப காலத்தில் உங்கள் தலைமுடிக்கு வண்ணம் தீட்ட திட்டமிட்டால், மூலிகை வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். இதற்கு நீங்கள் ஒரு நல்ல சிகையலங்கார நிபுணரையும் அணுகலாம்.

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, அரை நிரந்தர மற்றும் நிரந்தர ஹை கலரில் அதிக இரசாயனங்கள் உள்ளன, இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூச விரும்பினால், தற்காலிக நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது.

Kathir

Next Post

ஸ்மார்ட் போனை 100 சதவீதம் சார்ஜ் செய்பவரா நீங்கள்…? பேட்டரி வெடிக்கும்..! இனிமேல் அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்…

Tue Aug 22 , 2023
மனிதனின் தற்போதைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன் மிகவும் தேவையானதாக மாறிவிட்டது. ஒருவர் ஒரு போன் பயன்படுத்தும் காலம் மாறி இரண்டு மூன்று போன்காளை பயன்படுத்தி வருகின்றனர். பயணம் முதல் செலவு வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறோம். பொருள்கள் வாங்கவோ அல்லது பில் செலுத்துவதற்கோ என அனைத்துப் பரிவர்த்தனைகளும் மொபைல் போனில் தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தால் போதும் பணம் கையில் தேவையில்லை என்றே சொல்லலாம் […]

You May Like