fbpx

’உன்னால சமையல் கூட சீக்கிரம் பண்ண முடியாதா’..? மாமியார் திட்டியதால் விபரீத முடிவெடுத்த மருமகள்..!!

திருப்பத்தூர் அருகே மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (27). இவர், கோவை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஆதிலட்சுமி (22) என்பவருடன் காதல் ஏற்பட்டு, திருமணமும் செய்து கொண்டார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதிலட்சுமியின் பெற்றோர், பின்னர் சமாதானம் அடைந்து 20 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை மருமகனுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அடிக்கடி ஆதிலட்சுமியின் கணவர் குடும்பத்தினர் சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆதிலட்சுமி சமையல் செய்வதில் தாமதப்படுத்தியதாக கூறி மீண்டும் சண்டையிட்டு உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ஆதிலட்சுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஆதிலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், இந்த வழக்கின் விசாரணை திருப்பத்துார் சப் – கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

நடிகை ஷாலினியை தாண்டி விஸ்வரூபம் எடுத்த அஜித்தின் மகள்…..!

Mon Mar 13 , 2023
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி உள்ளிட்ட இருவருக்கும் கடந்த 2000வது ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று இரு குழந்தைகள் இருக்கிறார்கள் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவும். அந்த வகையில், தற்சமயம் நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடுத்த சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட தங்களுடைய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதில் அஜித்தின் மகள் அனோஷ்கா தன்னுடைய தாயையும் […]

You May Like