தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திரு விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் நவம்பர் 18ஆம் தேதி 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார்.
விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நிம்மதியில் உள்ளனர்.