fbpx

காவிரி விவகாரம்: அக்டோபர் 12ல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு…!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினித் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கர்நாடக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், நடக்க இருக்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நடக்க இருக்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்திலும் கர்நாடக அரசு 3ஆயிரம் கன அடி வீதம் நீரை திருந்து விடும் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கையும் அதற்கான காரணத்தையும் வைக்கும் என்று தெரிகிறது, மேலும் ஏற்கனவே ஆணையம் உத்தரவின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டிருக்கிறதா, திறந்து விடவில்லை என்றால் அதற்கான விளக்கம் கேட்கப்படும், அதன் பின்பு நிலுவையில் உள்ள நீரின் அளவு, அடுத்து எவ்வளவு தண்ணீர் திறக்கலாம் போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்த குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்புவர், அதன்பிறகு ஆணையம் புதிதாக உத்தரவு பிறப்பிக்கும்.

Kathir

Next Post

உங்கள் பர்சில் பணம் சேர, இந்த பொருளை உங்கள் பர்சில் வைத்து பாருங்கள்..

Wed Oct 4 , 2023
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது பணம். அந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் பாடுபடுகின்றனர். பணம் இல்லை என்றால் நம்மை நாயை விட மோசமாக நடத்துவர். அதுவே பணம் இருந்தால், நமக்கு ராஜ மரியாதை கிடைக்கும். அந்த வகையில், எப்படியாவது பணம் சேர்த்து விட வேண்டும் என்று இரவு பகலாக உழைக்கின்றனர். மாதத்தின் முதல் நாள் கை நிறைய பணம் வாங்குவார்கள், ஆனால் ஓரிரு நாட்களில் கடன் வாங்கும் […]

You May Like