தமிழகத்தில் எதிர்வரும் மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதோடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தெற்கு வங்க கடல் பகுதியில் வேலை விவரம் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.