fbpx

இறுதிக்கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3..!! விண்கலத்தில் இருந்து பிரிகிறது லேண்டர்..!!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 17) லேண்டர் பகுதியானது பிரிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக எல்.வி.எம். 3 – எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி புவியீா்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தற்போது நிலவின் தரைப் பகுதியிலிருந்து 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலவைச் சுற்றி வருகிறது.

இந்நிலையில், நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக்கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டா் கலன் ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று விடுவிக்கப்படுகிறது. இந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிலவில் வரும் 23ஆம் தேதி தரையிறக்கப்படவுள்ளது.

Chella

Next Post

அடப்பாவி ஒரு நிலத்திற்காக பெற்ற தந்தையையே இப்படி பண்ணிட்டியே….! தந்தையை கொலை செய்து நாடகமாடிய திமுக பிரதிநிதி…..!

Thu Aug 17 , 2023
கடலூர் அருகே பெற்ற மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமு( 69) இவர் ஒரு சைக்கிள் கடையை நடத்தி வருகிறார் இவருக்கு, புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் உள்ளிட்ட மூன்று மகன்கள் இருக்கிறார்கள். ராமு தன்னுடைய மனைவியுடன் புருஷோத்தமன் வீட்டில் வசித்து வருகிறார். ராமுவின் […]

You May Like