சந்திராயன் 3 விண்கலத்தை 2வது சுற்று பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்ததாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சென்ற 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கி சந்திராயன் 3 வெண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
சந்திராயன் 3 விண்கலத்தின் முதல் சுற்றுவட்ட பாதை அதாவது, 179 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்த சூழ்நிலையில், இன்று 2வது சுற்று வட்டப் பாதைக்கு அதாவது 226 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் 3 வெண்கலம் மேலும் உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது என்றும், அடுத்த கட்டமாக சுற்றுவட்ட பாதையை உயர்த்தும் பணி நாளை பிற்பகல் 2️ முதல் 3️ மணிக்குள் நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது