இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கணக்குகள் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். தற்போது அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். மேலும், பண பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கட்டாயம் அவசியம். வங்கிக் கணக்கு இல்லையென்றால், பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
அதே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் உள்ளனர். ஆனால், அவற்றை முறையாக பராமரிப்பதில்ல்லை. ஒருவருக்கு எத்தனை வங்கிக் கணக்குகள் இருக்கலாம்? ஒரு இந்தியர் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியும்? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாட்டில் பல வகையான வங்கிக் கணக்குகள் திறக்கலாம். இதில் சேமிப்பு வங்கி கணக்கு, நடப்பு வங்கி கணக்கு மற்றும் சம்பள வங்கி கணக்கு ஆகியவை அடங்கும். எனவே, உங்கள் நோக்கங்களை நிறைவேற்ற எந்த கணக்கு சரியாக இருக்குமோ அதை திறக்கலாம். இருப்பினும், எத்தனை வங்கிக் கணக்குகளை நாம் வைத்திருக்க முடியும் என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.
அதாவது, ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். நீங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் எவ்வித வரம்பும் இல்லை. இருப்பினும், அதிக வங்கிக் கணக்குகளை பராமரிப்பது கடினமாக இருப்பதால், சில வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
உண்மையில், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கில் இருக்க வேண்டும். அந்த தொகை இல்லையென்றால், அதற்கு அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, ஏடிஎம் கட்டணம் போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு மிகவும் தேவையான அளவு வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருப்பது நல்லது.