fbpx

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்..! செலவு ரூ.22,149 கோடி… வருவாய் ரூ.200 கோடி..! அதிர்ச்சி தகவல்..!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மொத்தம் ரூ.22,149 கோடி செலவு ஆகியுள்ள நிலையில், தற்போது வரை ரூ.200 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. தற்போது சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.18,380 கோடி செலவில் 45.10 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்பட்டது. இதன் இணைப்பு திட்டம் ரூ.3,770 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.22,149 கோடி ரூபாய் செலவில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு, விம்கோ நகர்-சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல்-பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்..! செலவு ரூ.22,149 கோடி.. வருவாய் ரூ.200 கோடி..! அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், டெல்லி போன்று கூட்டம் நிரம்பி வழிவது இல்லை. சென்னை மெட்ரோ ரயில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3,01,15,886 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், 2019-20ஆம் நிதியாண்டில் ரூ.119.25 கோடி, 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.30.08 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.85.34 கோடி, 2022-23ம் ஆண்டில் ஜூன் 30ஆம் தேதி வரை ரூ.44.25 வரை மொத்தம் ரூ.278.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்..! செலவு ரூ.22,149 கோடி.. வருவாய் ரூ.200 கோடி..! அதிர்ச்சி தகவல்..!

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22,149 கோடி செலவு ஆகியுள்ளது. ஆனால், இதுவரை ரூ.278 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. எனவே, இந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை உயர்த்த தனி ஆலோசகர்களை நியமிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த டெண்டரில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. விரைவில் இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு... பூங்கா அமைக்க தோண்டப்பட்ட பள்ளித்தில் விழுந்து பலியானதால் அதிர்ச்சி…

Wed Sep 7 , 2022
 தேனி அருகே ஓடைப்பட்டியில் சமத்துவரத்தில் பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே வருசநாடு , மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா . இவரது தனது 8 வயது மகளான ஹாசினி ராணியை சமத்துவபுத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தாத்தாவின் வீட்டு முன்பு சிறுமி விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றார். பெரிய பெரிய குழிகள் தோண்டப்பட்டிருப்பதை […]

You May Like