fbpx

தமிழகத்தில் வரும் 21,22 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன்‌ கூடிய மழை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 21,22 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்குகளில்‌ கிழக்கு திசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவக்கூடும்‌. இதன் காரணமாக, நாளை தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ வட தமிழக உள்‌ மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

செம குட் நியூஸ்..!! தமிழகத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

Wed Apr 19 , 2023
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நேற்று நடைபெற்றது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த திருவிழாக்களில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த […]

You May Like