fbpx

இடி மின்னலுடன் கூடிய மழை…! இன்று இந்த 14 மாவட்டத்தில் மட்டும்…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த உணவுகளை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.. பல நோய்களையும் தவிர்க்கலாம்..

Mon Sep 26 , 2022
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்தத்தை சுத்தமாக வைத்திருப்பதும், உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றுவதும் அவசியம். உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு செல்வது மட்டுமின்றி மாசுகள் மற்றும் கழிவுகளை நீக்குவதால், உங்கள் உடல் சரியாக செயல்பட இயற்கையான ரத்த சுத்திகரிப்பு உணவுகள் அவசியம். எனவே, உடலின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க மற்றும் நோய்களை அகற்ற, ரத்த சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது. ரத்த சுத்திகரிப்பு காரணமாக, சிறுநீரகம், […]

You May Like