fbpx

வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை மையம் கணிப்பு…!

டிசம்பர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ்சாகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

Mon Nov 28 , 2022
தேங்காய் எண்ணெய் முடிகளுக்கு மட்டும் அல்ல உணவிலும் சேர்த்து வந்தால் பலன் பெறலாம். இதில் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே உபயோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நல்லது தான் ஆனால் அதற்காக அளவுக்கு மீறி […]

You May Like