fbpx

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை கனமழை பெய்யும்.‌..! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறியிருப்பதாவது; வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வரும் 31-ம் தேதி வரை கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்..; அடுத்த மாதம் 11-ம் தேதி வரை அனைத்து சாலை வரிகளும் ரத்து...! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு...!

Sun Aug 28 , 2022
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்ய உள்ளதால் கொங்கன் பகுதியில் செப்டம்பர் 11 வரை அனைத்து சாலை கட்டண வரிகளையும் ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால், மகாராஷ்டிராவின் மேற்கு கடற்கரைக்கு லட்சக்கணக்கான லட்சக்கணக்கான விநாயகர் பக்தர்கள் பயணம் செய்யும் போது, ​​கொங்கன் பகுதியில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை அனைத்து சாலை கட்டண வரிகளையும் தள்ளுபடி செய்ய […]
சுங்கச்சாவடி மாதாந்திர பயண அட்டைக்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா..? - மத்திய அமைச்சர் பதில்

You May Like