தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் .தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பதிவு எதுவும் இல்லை. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.