fbpx

வரும் 6-ம் தேதி வரை கொட்டி தீர்க்கப் போகும் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு....! 900-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 30 சதவீதம் வரை உயர்வு...!

Mon Apr 3 , 2023
இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீடு கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அறிவிப்பு மூலம் விலை மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. வலி […]

You May Like