fbpx

#Pension: ஓய்வூதியதாரர்கள் அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…! வெளியான அறிவிப்பு…!

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் தொடங்கியுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது.

ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னைத்துறைமுக ஆணையத்தின் இணையதளமான www.chennaiport.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் தங்களின் புகைப்படத்தின் மீது தாங்கள் ஓய்வூதியத்தொகை பெறக்கூடிய வங்கி மேலாளரிடம் உண்மை சான்றிதழாக கையெழுத்து பெறவேண்டும். மேலும் வங்கி மேலாளரின் பெயர், பதவியின் பெயர், மற்றும் அலுவலக முத்திரை, பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றை படிவத்துடன் சேர்த்து கூரியர் சேவை அல்லது விரைவு தபால் (Speed Post) வாயிலாக சென்னைத் துறைமுகப் ஆணையத்திற்கு 31.12.2022 க்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Vignesh

Next Post

’அவன நீ மறந்துரு’..!! ’அது மட்டும் என்னால முடியாது’..! கள்ளக்காதலனுக்காக தூக்கில் தொங்கிய மனைவி..!!

Fri Nov 4 , 2022
கள்ளக்காதலை கைவிட சொன்னதால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெண்ணின் கணவர் சமையல்காரர் என்பதால் அவர் அடிக்கடி சமையல் வேலைக்காக வெளியே சென்றுவிடுவார். அந்த சமயத்தில், வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. கணவன் வேலைக்கு […]

You May Like