சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் தொடங்கியுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது.
ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னைத்துறைமுக ஆணையத்தின் இணையதளமான www.chennaiport.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் தங்களின் புகைப்படத்தின் மீது தாங்கள் ஓய்வூதியத்தொகை பெறக்கூடிய வங்கி மேலாளரிடம் உண்மை சான்றிதழாக கையெழுத்து பெறவேண்டும். மேலும் வங்கி மேலாளரின் பெயர், பதவியின் பெயர், மற்றும் அலுவலக முத்திரை, பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றை படிவத்துடன் சேர்த்து கூரியர் சேவை அல்லது விரைவு தபால் (Speed Post) வாயிலாக சென்னைத் துறைமுகப் ஆணையத்திற்கு 31.12.2022 க்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது