fbpx

செஸ் ஒலிம்பியாட்..! முதல் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்று அசத்தல்..!

முதல் முறையாக இந்திய மகளிர் அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது. போர் நடந்து வரும் சூழலில் உக்ரைன் மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்தியா – பி அணி சார்பில் குகேஷ் பிரக்யானந்தா, சரின், சத்வானி ஆகியோரும் மகளிர் பிரிவில் ஹம்பி, வைஷாலி, தான்யா, குல்கர்னி ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்..! முதல் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்று அசத்தல்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் தமிழக வீரர் குகேஷ் மற்றும் சரின் ஆகியோர் தங்கப் பதக்கம் பெற உள்ளனர். பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் பெற உள்ளார்.

Chella

Next Post

குழந்தை பரிகாரம் கேட்டு வந்த பெண்; சாமியார் செய்த பகீர் சம்பவம்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை..!

Tue Aug 9 , 2022
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் மகளிர் காவல் துறையினர், மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படும் சாமியார் வைராக்கியானந்த் கிரி என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், ஒரு பெண் இந்த சாமியாரிடம் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்த அந்த சாமியார் அவர் மயங்கியவுடன், அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இந்த சம்பவத்தை யாரிடமாவது […]

You May Like