fbpx

முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா..! அனைவரும் பாதுகாப்பாய் இருப்போம் என ட்விட்டரில் பதிவு..!

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்ததாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Stalin announces Rs 2,000 as covid time relief, cut in Aavin milk price

கடந்த மாதம் கூட 2, 3 நாட்கள் காய்ச்சல் காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். அப்போது, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று காலை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

பிரபல இயக்குநரின் தாயார் மறைவு..! திரையுலகம், ரசிகர்கள் இரங்கல்..!

Tue Jul 12 , 2022
பிரபல நடிகரும், இயக்குநருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு இறுதி சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு இயக்குனர் அமீர் ஹஜ் புனித பயணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அமீர் தாயார் மறைவுக்குத் திரையுலகைச் […]

You May Like