fbpx

மகளையே கர்ப்பம் ஆக்கிய காமுக தந்தை…..! கிருஷ்ணகிரி அருகே நடந்த கேவலமான செயல்..,..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியும் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கம்பி கட்டும் தொழிலாளி ஒருவர் அந்த சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமியும் மற்றும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனை தொடர்ந்து, பதறிப்போன தாயார் மகளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து சிறுமியின் தாயார் அந்த சிறுமியிடம் விசாரித்த போது அழுது கொண்டே ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார். அதாவது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்வது கர்ப்பம் அடைந்ததாக கூறியதால் சிறுமியின் தாயார் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் ஆகவே இந்த புகாரியின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Post

எலிகளுக்கு எமனாக மாறிய நியூசிலாந்து.!! நாட்டில் ஒரு எலி கூட இருக்கக் கூடாதாம்..!! ரவுண்டு கட்டி அடிக்க என்ன காரணம்..?

Sun Jul 2 , 2023
“எலித் தொல்லையால் தவித்த ஒரு நகரத்தைக் காப்பாற்ற மாயக் குழல் இசைப்பவர் ஒருவர் வந்தார். அவர் தெருவில் குழல் இசைத்தபடி நடக்க, நகரில் இருந்த எலிகள் அவர் பின்னால் வந்தன. எல்லா எலிகளையும் அவர் ஆற்றில் இறக்கி அழித்தார்” என்கிற கதையை பலர் படித்திருப்பீர்கள். எலிகளை மட்டுமல்ல, அதுபோல பல்கிப் பெருகும் பல வகை அந்நிய வேட்டை விலங்குகளை 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து முற்றிலுமாக அழித்துவிட திட்டம் தீட்டி […]
எலிகளுக்கு எமனாக மாறிய நியூசிலாந்து.!! நாட்டில் ஒரு எலி கூட இருக்கக் கூடாதாம்..!! ரவுண்டு கட்டி அடிக்க என்ன காரணம்..?

You May Like