fbpx

குழந்தையில்லாத விரக்தி!… பக்கத்துவீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம்!… கொல்கத்தாவில் அதிர்ச்சி!

பல ஆண்டுகளாக குழந்தையில்லாததால், மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஸ்ரீதர் ராய் ரோடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போய் இருக்கிறார். இதையடுத்து சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அடுக்குமாடி வீடு ஒன்றில் சாக்கு மூட்டைக்குள் இருந்து சிறுமியின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அலோக் குமார் என்பவர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தனக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மந்திரவாதி ஒருவரின் அறிவுறுத்தலின்படி 7 வயதுப் சிறுமியை பலி கொடுத்ததாக போலீசாரிடம் அலோக் குமார் தெரிவித்துள்ளார். அதாவது தனது மனைவிக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதால், அவர் மந்திரவாதியை அணுகியதாகவும், நரபலி கொடுத்தால் பிரச்னை தீரும் என அவர் கூறியதையடுத்து இவ்வாறு செய்தாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை!... டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!... விவரம் உள்ளே!

Thu Mar 30 , 2023
பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு கடலோர பகுதி மீனவர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொதை வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் […]

You May Like