இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தற்போது மழைக்காலம் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் அதிகாமாக, சளி மற்றும் இருமலால் மட்டும் தான் குழந்தைகள் அதிக அசௌகரியத்தை உணர்கிறார்கள். குழந்தைகளை இருமலில் இருந்து காக்க சில வைத்திய குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.
இஞ்சி-தேன்: இருமல் பிரச்சனையில் இருந்து குழந்தைக்கு நிவாரணம் அளிக்க இஞ்சி நன்மை பயக்கும். இதற்கு இஞ்சி சாற்றில் சிறிது தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம், குழந்தைக்கு விரைவில் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு-தேன்: தேனுடன் பூண்டையும் பயன்படுத்தலாம். இதற்கு, நீங்கள் தோலுரித்த பூண்டு பல்லை நன்றாக நசுக்கி, இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், குழந்தைக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.