fbpx

வாக்கு எண்ணிக்கை அன்று மோதல் நடக்க கூடாது…! தலைமை செயலாளர் உத்தரவு…!

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நாளை 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் பொழுது சட்ட ஒழுங்கு குறித்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் பேசிய அவர்; ஜூன் 4-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மோதல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். சென்னையில் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

Vignesh

Next Post

தலித் தலைவரின் பிரதமர் கனவை சிதைத்த, இந்தியாவின் முதல் பாலியல் ஊழல்..!!

Fri May 31 , 2024
ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு 1977 இல் வெளிப்பட்ட இந்தியாவின் முதல் அரசியல் பாலியல் ஊழலை நினைவுபடுத்துகிறது. பாபு ஜக்ஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராம், கல்லூரிப் பெண்ணுடன் 40-50 ஆபாச புகைப்படங்கள் எடுத்த ஊழல் மூத்த தலைவரின் பிரதமர் கனவை சிதைத்தது. அது 21 ஆகஸ்ட் 1978 அன்று, நாற்பதுகளின் நடுப்பகுதியில் உள்ள ஒரு நபர், திகைத்து, காயத்துடன், டெல்லியின் […]

You May Like