நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சட்டமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்தாரே நம் அன்புத் தாய், அந்தத் தாயின் சபதத்தை […]

ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம், முதல் முறையாக, 2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரிவுகளில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த முன்முயற்சி தேர்தல் செயல்முறையில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை உறுதி செய்வதிலும், ஜனநாயக பங்கேற்பை அதிகரிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை […]

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அனுமதி மறுத்துவிட்டது. மதுரையைச் சேர்ந்த மனுதாரர் ராம் குமார் என்பவர், ரயில்வே ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், வாக்களிக்க முடியவில்லை எனக்கூறி, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு இரயில்வே ஊழியர்கள் எம்.எச்.சி.மெட்ராஸ் […]

தற்போது நடந்த ஒரு கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிவை குறித்து சில பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை பாஜக கொண்டு வந்த போது, அவற்றை ஆதரித்த அதிமுக இப்போது அவர்களை எதிரியாக கருதுவது நாடகமாக தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக நீடித்து வந்த அதிமுக மற்றும் பாஜக உடைய கூட்டணி, […]

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் குற்றம் சாட்டியிருந்தன. இது தொடர்பாக பேசிய […]

2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், பாராளுமன்றத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும் பொது தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி பாராளுமன்ற கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வின்போது பேசிய அவர் குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது […]

இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒருபுறம் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு வேலைகளில் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசியல் சார்ந்த மோதல்கள் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நிதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு டெல்லியில் ஆர்ப்பாட்டமும் நடத்தியது . இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பான […]

இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியுடன் […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்து வாரம் தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தனது கட்சியின் பெயரையும் வெளியிட்டார். தளபதியின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்களும் […]

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது . கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார் இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் அந்தக் கட்சியிலிருந்து விலகி […]