டெல்லி மாநிலம் பிரசாந்த் விகார் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் கடந்த ஜூலை 7ஆம் தேதி காரில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்த தருணத்தை கவனித்த ஒரு நபர், ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர், இவர்களது காரை பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். காதலன் கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அவரும் இறங்கி சென்றதை கவனித்த நபர் மாணவியை பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளார்.
பின்னர், அவரிடம் தான் ஒரு போலீஸ் என்றும் காதலனுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளேன் என செல்போனை காண்பித்துள்ளார். மேலும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இதை ஆன்லைனில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியை பலந்தமாக தாக்கி படிகட்டு பகுதியில் வைத்து பாலியல் பலாத்கராம் செய்துள்ளார்.
பாதிப்புக்கு ஆளான அந்த பெண் தனது காதலனிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவி கொடுத்த அடையாளம் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரவி சோலங்கி என்ற அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.