fbpx

ஓரினச்சேர்க்கை உல்லாசம்.. வீடியோ எடுத்த மிரட்டிய காதலன் படுகொலை..!! ’19’ வயது இளைஞன் வெறி செயல்.!

மதுரை அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் 25 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரின் நண்பரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பாவத்(25).

கல்லூரி மாணவரான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மதுரை அழகர் கோவில் பகுதியில் அழுகிய நிலையில் பைசலின் உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஜெயசீலன்(19) என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

காவல்துறையின் விசாரணையில் தனது நண்பர் பைசலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் ஜெயசீலன். பைசல் மற்றும் ஜெயசீலன் இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்திருக்கிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக ஜெயசீலனை மிரட்டி இருக்கிறார் பைசல் . இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் அழகர் கோவில் மலைப்பகுதிக்கு பைசலை அழைத்துச் சென்று கொலை செய்த பின் மலையில் இருந்து கீழே தள்ளி விட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

'UG/PG/B.ED' முடித்தவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு.! ரூ.40,000/- வரை சம்பளம்.! வாய்ப்பை தவற விடாதீங்க.!

Tue Feb 6 , 2024
புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 407 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் […]

You May Like