fbpx

’நான் எப்போ கூப்பிட்டாலும் வரணும்’..!! காதலியின் ஆபாச வீடியோவை காட்டி பலமுறை பலாத்காரம்..!!

செஞ்சி அருகே ஆபாச வீடியோவைக் காட்டி இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் வெங்கடேசன் (30). இவர், 20 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசைவார்த்தை கூறி காதலியை வெங்கடேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய வெங்கடேசன், தனது காதலியிடம் ஆடைகள் அனைத்தையும் களைய வைத்து பேசியுள்ளார்.

அப்போது, காதலி நிர்வாணமாக இருப்பதை தனது செல்போனில், காதலிக்கே தெரியாமல் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை காதலியிடம் காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவரை வீட்டுக்கு கடத்திச் சென்று ஆசை தீர பலாத்காரம் செய்துள்ளார். நாளுக்கு நாள் வெங்கடேசனின் டார்ச்சர் அதிகரிக்கவே பொறுமையை இழந்த பெண், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக அவரது அண்ணன் புருஷோத்தமன் (32), உறவினர் பூபாலன் (40), பூபாலன் மனைவி புஷ்பா (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

BREAKING NEWS: "அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் நிலவும் புது சிக்கல்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Tue Jan 16 , 2024
கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் எப்போதும் அச்ச உணர்வு உடனே இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிய வானிலை எச்சரிக்கை தமிழகத்திற்கு வெளியாகி இருக்கிறது. இந்த எச்சரிக்கையின் படி தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த […]

You May Like