மத்தியப்பிரதேசம் மாநிலம் தனியார் பள்ளி ஒன்றில் மாவட்ட கல்வி அதிகாரி ஏ.கே. பதக் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தலைமை ஆசிரியரின் அறைக்குள் மதுபாட்டில்கள், ஆணுறைகள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் டாக்டர் நிவேதிதா சர்மா, பள்ளியின் முதல்வர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு மதுபாட்டில்களை வைத்திருந்த குற்றத்திற்காக, அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.