fbpx

ஏமாற்றி தொற்றக்கூடிய தன்மை கொண்டது JN.1!… எங்கிருந்து வந்தது?… மருத்துவ நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (US CDC) சமீபத்திய தரவுகளின்படி, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் என்னும் வேரியன்ட்டின் புதிய துணை வேரியன்ட் JN.1 கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 44.2% பேருக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இந்த புதிய ஜேஎன்1 வைரஸ் பாதிப்பினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கர்நாடக மாநிலம் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ளது. இதனால் அண்டை மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் வழிகாட்டுதல் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாகவே குளிர்கால வானிலை, மக்களை காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் என்று முடக்கிப் போட்டுவிடும் நிலையில், பிற வைரஸ்கள் பரவுவதால் கோவிட் 19-ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-2, தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸின் சமீபத்திய திரிபு வடிவமான ஜேஎன்.1 என்ற வைரஸ் மிகவும் அதிகம் பரவக் கூடியது என்று யேல் பல்கலைக்கழக மருத்துவ அறிக்கையும், அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பும் தெரிவிக்கின்றன. குளிர் காலங்களில் ஜேஎன்.1 கொரோனா வேரியன்ட் பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், யேல் பல்கலைக்கழக தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ஹெய்டி சபாட்டா கூறும்போது, “இந்த புதிய வேரியன்ட் பற்றி இன்னும் எங்களுக்கு மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை” என்றார். இதோடு பிற துணை உருமாற்ற வைரஸ்களும் சுழற்சியில் உள்ளன. டிசம்பரில் அமெரிக்காவில் ஹெச்வி.1 என்ற வைரஸ் பரவி வந்தது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 29% பேரை சோதித்தபோது இந்த வைரஸ் இருந்தது தெரியவந்தது. ஈஜி.5 என்ற இன்னொரு வேரியன்ட் உள்ளது. இது முதலிடத்தில் இருந்தது. இப்போது அது ஜேஎன்.1 வைரஸினால் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை ஜேஎன்.1 கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஆகவே, பொதுச் சுகாதாரத்துக்கு பேராபத்து இருப்பதாகத் தெரியவில்லை என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தாலும், எச்சரிக்கையுடன் இந்த வைரஸை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

யேல் பல்கலை. மருத்துவ நிபுணர் சபட்டா கூறும்போது, “சுவாச ஒத்திசைவு வைரஸ் [respiratory syncytial virus-RSV] மற்றும் காய்ச்சல் வைரஸ் இன்னமும் சுழற்சியில் உள்ளது என்பது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்று நான் கூறுவேன். எந்த ஒரு புதிய உருமாற்றமடையும் வைரஸும், SARS-CoV-2 வைரஸ் இன்னும் உருவாகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆகவே, கொரோனா இன்னமும் நம்முடன்தான் உள்ளது என்ற உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது” என்று எச்சரித்துள்ளார்.

ஜேஎன்.1 எங்கிருந்து வந்தது? கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் ஜேஎன்.1 வைரஸ் இருப்பது தெரியவந்தது. பைரோலா என்று அழைக்கப்படும் BA.2.86 என்ற வைரஸுடன் ஜேஎன்.1 வைரஸ் நெருங்கிய உறவு கொண்டது. ஓமிக்ரான் வைரஸின் வம்சாவளியில் இந்த வைரஸ் வருகிறது. இந்த ஓமிக்ரான் தான் 2021-ல் அமெரிக்காவையே உலுக்கியது. இது பல வடிவங்கள் எடுத்துவிட்டது. இப்போது இந்த அசல் வடிவம் சுழற்சியில் இல்லை.

BA.2.86 வேரியன்டுக்கும் ஜேஎன்.1 வேரியண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஜேஎன்.1 வைரஸ் அதன் ஸ்பைக் புரதத்தில் இன்னுமொரு உருமாற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மாற்றம் வைரஸின் மையமான தன்மைகளை மாற்றாது. ஆனால், முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதுதான் கவலையளிக்கும் ஓர் அம்சம், ‘இது உடலின் நோய்த் தடுப்பு, நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கூடுதலாக ஏமாற்றி தொற்றக் கூடியது’ என்பதே ஆகும்

ஜேஎன்.1 வைரஸ் குறித்து எதையும் திட்டவட்டமாகச் சொல்வதற்கு இப்போதைக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றாலும், இது கடுமையான நோய் அல்லது முந்தைய வேரியன்ட்களுடன் தொடர்புடைய அறிகுறிகளை விட அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இப்போதைக்கு கூற முடியவில்லை என்கிறது அமெரிக்க நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். ஆகவே, இதற்கான அறிகுறிகள் என்பது பொதுவான கரோனா அறிகுறிகளையே கொண்டிருக்கும். தீவிரத்தன்மை அந்தந்த தனிநபரின் நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்து வேறுபடும். ஆனால், இது மற்ற கொரோனா வேரியன்ட்களை விட நம் உடல் எதிர்ப்பாற்றலை சாமர்த்தியமாக ஏமாற்றித் தொற்றக்கூடியது என்பதே ஆகும்.

Kokila

Next Post

நகைப்பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது..!!

Fri Dec 29 , 2023
கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக, கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சவரனுக்கு 960 ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதற்கிடையே, இன்று வர்த்தகம் துவங்கியதும் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்தது. […]

You May Like