இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்த 5 பேரில் ஒருவருக்கு வாசனை நுகரும் திறன் குறைந்திருப்பதாகவும், 20 பேரில் ஒருவருக்கு முற்றிலுமாக வாசனை நுகரும் திறன் போய்விட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வாசனை திறன் இழப்பார் என்பது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் அதன் பிறகு 4 ஆண்டாகியும், கொரோனாவால் இழந்த வாசனை நுகரும் திறனை மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. […]

உலகை அச்சுறுத்தி வரும் JN.1 கொரோனா வைரஸைக் கண்டு மீண்டும் வீட்டுக்குள் முடங்கும் சூழல் வருமோ என்ற அச்சம் ஒரு பக்கம் எழுகிறது. தற்போது ஜெ.என்.1 வைரஸ் குறித்த ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன, அந்த வகையில் உலக சுகாதார அமைப்பு இந்த புதிய ஜெ.என்.1 கொரோனா வைரஸ் குறைந்த அளவிலான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த புதிய வைரஸை கண்டு பயப்படத் தேவையில்லை. இருப்பினும் பரவும் […]

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது வெறும் செய்தி அல்ல, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டியதற்கான ‘எச்சரிக்கை மணி’ என்றுபதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 பேர் கேரளா, 2 பேர் கர்நாடகா, […]

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு […]

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (US CDC) சமீபத்திய தரவுகளின்படி, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் என்னும் வேரியன்ட்டின் புதிய துணை வேரியன்ட் JN.1 கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 44.2% பேருக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஜேஎன்1 வைரஸ் பாதிப்பினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து […]

கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 2020ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போல் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கேரளா 3, கர்நாடகா 2, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதாவது ஏற்கனவே சீரியசான உடல்நலப் பாதிப்புகள் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது உயிரிழப்புகளில் கொண்டு போய் […]

தற்போது ஜேஎன்1 வகை கொரோனா தொற்று நாடெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. கேரளாவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா தொற்று குறித்த அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னிலையில் நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்குமா என மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு ஜேஎன் 1 வகை […]

திடீரென மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் மீண்டும் உலகளவில் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கலிக் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வைரஸ் அறிகுறிகளுடன் மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை […]

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகெங்கிலும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பல கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கொடிய நோயிலிருந்து அந்த சமயத்தில் குணமடைந்து வந்திருந்தாலும், அதன் தாக்கங்கள் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் உடல் நலன் மற்றும் மன நலன் ஆகிய இரண்டும் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து தற்போது பார்க்கலாம். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து ஏறக்குறைய […]

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந் தொற்று உலகையே முடக்கியது. இந்தத் தொற்று நோயால் உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து தற்போது தான் உலகம் மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு 230 பேருக்கு பரவிய இந்த […]