fbpx

தொடர் மழை..!! திடீரென இடிந்து விழுந்த போக்குவரத்து பணிமனை..!! நடந்தது என்ன..?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 17 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் பழுதான பேருந்துகளை மீண்டும் புதிதாக கட்டமைப்பதும், பேருந்துகளின் பழுதுகளை சரி செய்வதும் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை மாநகர் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் தாமிரபரணி பணிமனை, 700 பேருந்துகளின் பழுதை சரிபார்க்கும் பெரிய பணிமனையாக செயல்படுகிறது. ஆயிரம் தொழிலாளர்கள் வரை இந்த பணிமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் மழையால் திடீரென பணிமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுற்று சுவர் இடிந்து விழுந்த பகுதியானது பேருந்து இன்ஜினை சரி செய்யும் பகுதி. எதிர்பாராத விபத்து என்றாலும் சுற்றுச்சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என பணியில் இருந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சரவணனிடம், சுவரின் உறுதியற்ற தன்மை குறித்து பலமுறை எடுத்து சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சேதமாகி இருக்கும் பணிமனையின் சுவர்களை உடனடியாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் விடுத்துள்ளனர்.

Chella

Next Post

’அப்பா இறந்தது எங்களுக்கே ஷாக்தான்’..!! மறைந்த மனோபாலாவின் மகன் ஹரீஷ் பரபரப்பு பேட்டி..!!

Wed May 3 , 2023
அப்பா நன்றாக தேறி வந்தார். ஆனால் திடீரென அவர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என மனோபாலாவின் மகன் ஹரீஷ் தெரிவித்துள்ளார். நடிகர் மனோபாலா நாகர்கோவிலில் மருங்கூர் என்ற ஊரில் பிறந்தவர். அவரது இயற்பெயர் பாலசந்தர். திரைப்படத்திற்காக மனோபாலா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர், கமல்ஹாசனின் பரிந்துரையின் பேரில் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது பணியை தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். […]

You May Like