fbpx

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா!… ஐபிஎல் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுத்தியுள்ளது.

நடப்பாண்டின் ஐபிஎல் 16வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதன்படி, 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தநிலையில், இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறி இருப்பதாவது: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம், ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை, கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வீரர்களையும் உதவி ஊழியர்களையும் நாங்கள் வழிநடத்தியுள்ளோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியம். அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். எங்கள் குழு நிலைமையை கண்காணித்து வருகிறது என கூறப்பட்டு உள்ளது.

அதாவது கடந்த 2 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் தொற்று பாதிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மராட்டியம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஐபிஎல் சீசன்கள் பயோ – பபூள் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மாம்பழ பிரியர்களா நீங்கள்?... 24 மணிநேரத்தில் வீட்டிற்கே வரும் மாம்பழம்!... இந்திய அஞ்சல் துறை புதிய ஏற்பாடு!

Sat Apr 8 , 2023
மாம்பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கும் முறையை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எந்தப் பகுதியிலிருந்தும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் மாம்பழத்தை ஆர்டர் செய்தால், அது வெறும் 24 மணி நேரத்தில் சப்ளை செய்யப்படும். அதற்காக, கோலார் விவசாயிகள், தபால் துறையின் ஒத்துழைப்புடன் ‘நம்ம தோட்டம்’ என்ற தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நுகர்வோரின் வீட்டு வாசலில் பழங்களை கொண்டு சேர்க்கின்றனர். ஆர்டர் செய்பவர்கள் […]

You May Like