fbpx

வீட்டிற்கு விசிட் அடித்த கள்ளக்காதலி..!! புரட்டி எடுத்த மனைவி..! கட்டியிருந்த சேலையால் கதறவிட்ட காதலன்..!!

சென்னையில் கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை லாரி டிரைவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கு நதியா (32)என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். அதேபோல், திருவண்ணாமலை அருகே கண்ணக்குருக்கை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராஜின் செல்போன் எண்ணில் இருந்து தவறுதலாக நதியாவின் செல்போனுக்கு கால் வந்துள்ளது. அதிலிருந்து நதியா மற்றும் தங்கராஜ் நட்பாக பழகிய நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

வீட்டிற்கு விசிட் அடித்த கள்ளக்காதலி..!! புரட்டி எடுத்த மனைவி..! கட்டியிருந்த சேலையால் கதறவிட்ட காதலன்..!!

தங்கராஜ் சென்னைக்கு லாரி ஓட்டி வரும்போதெல்லாம், நதியாவையும் ஓட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நதியாவின் கணவருக்கு தெரியவரவே, தங்கராஜ் உடன் ஏற்பட்ட பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால், கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இப்படி நாள்தோறும் சண்டை வளர, சம்பவத்தன்று இரவு நதியா அவரது கணவர் மற்றும் 2 மகன்களை விட்டுவிட்டு தங்கராஜ் தான் வேண்டுமென கிளம்பி திருவண்ணாமலை சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத தங்கராஜ், நதியாவை தன் வீட்டிற்கு முன்பு கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

வீட்டிற்கு விசிட் அடித்த கள்ளக்காதலி..!! புரட்டி எடுத்த மனைவி..! கட்டியிருந்த சேலையால் கதறவிட்ட காதலன்..!!

அப்போது நதியா, நான் இனிமேல் உன்னோடு தான் வாழ போகிறேன் என தங்கராஜிடம் தெரிவித்துள்ளார். கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் சண்டையிட்டு விரட்டியடித்துள்ளார்.  அதைத்தொடர்ந்து, தங்கராஜும் நதியாவும் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோயில் பகுதிக்கு சென்றனர். அங்கு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார்.

வீட்டிற்கு விசிட் அடித்த கள்ளக்காதலி..!! புரட்டி எடுத்த மனைவி..! கட்டியிருந்த சேலையால் கதறவிட்ட காதலன்..!!

இதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், அவர் கட்டியிருந்த சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்துள்ளார். அப்போது, கிராம மக்கள் வருவதை பார்த்து, மின் கம்பத்தில் ஏறி தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த அங்கு வந்த பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

தேர்தலில் வெற்றிபெற குறுக்கு வழியை மேற்கொள்ளும் பாஜக.? கைதான பாஜக நிர்வாகி.!

Tue Oct 18 , 2022
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகராட்சியில் சோபாரி ஜெயஸ்ரீ என்பவர் 13 வது வார்டு பாஜக கவுன்சிலராக இருக்கிறார். இவரது கணவர் வேணுவும் பாஜக நிர்வாகி தான். நேற்று வேணு காரில் பயணம் செய்த போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர். மூணுகோடு பகுதியை நோக்கி அந்தப் பணத்தை குண்டூரில் இருந்து அவர் எடுத்துச் சென்றுள்ளார். […]

You May Like